செய்திகள்
கோப்புப்படம்

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு

Published On 2021-01-22 00:20 GMT   |   Update On 2021-01-22 00:20 GMT
ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் பலியானார்கள். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.
பாக்தாத்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் டயாரன் சதுக்கம் அருகே உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப்பகுதியில் நேற்று 2 பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் பின்தொடர்ந்து சென்றனர்.

அப்போது, இருவரும் தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 32 பேர் பலியானார்கள். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளில் ஈராக்கில் நடந்த முதலாவது தற்கொலைப்படை தாக்குதல் இதுவே ஆகும். ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாணியை நினைவுபடு்த்தினாலும், இதற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
Tags:    

Similar News