செய்திகள்
ராஜ்நாத் சிங்

அழகான தமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்: ராஜ்நாத் சிங்

Published On 2021-02-21 11:50 GMT   |   Update On 2021-02-21 11:50 GMT
தமிழில் பேச முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என சேலம் இளைஞர் அணி மாநாட்டில் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தமிழக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு இளைஞர் அணி மாநில தலைவர் பி.செல்வம் தலைமை தாங்கினார்.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில தலைவர் எல்.முருகன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் ரவி, இளைஞர் அணிதேசிய தலைவர் தேஜஸ்விசூர்யா வினோஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது ‘‘நான் தமிழில் அதிகமாக பேச விரும்புகிறேன். அழகான மொழியான தமிழில் பேச முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.’’ என்றார்.

மேலும், ‘‘கொரோனா காலத்திற்குப்பின் நாம் இந்தியாவின் அடுத்த வளர்ச்சிக்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறோம். நாளுக்குநாள் நமது நாட்டில் வெளிநாட்டு முதலீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாட்டின் பங்கு சந்தை ஜம்பிங் மட்டும் செய்யவில்லை. ஜல்லிக்கட்டு போல் விளையாடிகிறது’’ என்றார்.
Tags:    

Similar News