உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கம்
விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் என்.ராஜேந்திரன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றியம், செம்மாண்டம் பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நேற்று சனிக்கிழமை இல்லம் தேடிக் கல்வி தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் என்.ராஜேந்திரன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.தலைமை ஆசிரியர் பாலசிவக்குமார் வரவேற்று பேசினார். இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் பற்றி விழாவில் எடுத்துக் கூறப்பட்டது.
இதில் பள்ளி ஆர்வலர் கருணாகரன், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தன்னார்வலர்கள் ரம்யா, காஞ்சனா ஆகியோர் தன்னார்வலர்களுக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளி மாணவர்களும் குழந்தைகளுக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழா முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் தேன்மொழி, செல்வக்குமார், ஆசிரியை சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.