செய்திகள்
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
திருச்செங்கோடு மின் கோட்டத்திற்கு உட்பட்ட மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு மின் கோட்டத்திற்கு உட்பட்ட மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மல்லசமுத்திரம், மாமரபட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைபட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், காளிபட்டி, மங்களம், கரட்டுவளவு, சின்னகாளிபட்டி, செண்பகமாதேவி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிபட்டி, கட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய பொறியாளர் பானுமதி தெரிவித்துள்ளார்.