உள்ளூர் செய்திகள்
போலீசார் சார்பில் விபத்துகளை தடுக்க வாகன விழிப்புணர்வு
போலீசார் சார்பில் விபத்துகளை தடுக்க வாகன விழிப்புணர்வு நடத்தினர்.
அந்தியூர்:
போலீசார் சார்பில் விபத்துகளை தடுக்க வாகன விழிப்புணர்வு நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்து போலீசார் பல்ேவறி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறார்கள். இதே போல் அந்தியூர்அண்ணா மடுவு பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி தலைமையில் வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் எப்படி சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும், சாலை விபத்துக்களை தடுப்பது குறித்தும் ஒலி பெருக்கி மற்றும் காணொலி காட்சி மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். மேலும் விழிப்புணர்வு நோட்டீசு கொடுத்தும் வாகன விபத்துக்களை தடுக்க அறிவுரைகள் வழங்க ப்பட்டது.
முன்னதாக பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜி கொடி யசைத்து விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு வாகனம் பவானி, சித்தார், குறிச்சி, அம்மாபேட்டை, அந்தியூர், ஆப்பக்கூடல், அத்தாணி, கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. அந்த பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு வாகனங்கள் மூலம திரையிடப்பட்டு விழப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.