ஆன்மிகம்
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மாலை மாற்று வைபவம்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் ஆண்டாள்-பெருமாள் மாலை மாற்று வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் கடந்த 16-ந்தேதி சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி அரசு விதிமுறைகளின்படி உள்திருவிழாவாக நடத்தப்படுகிறது. நேற்று ஆண்டாள்-பெருமாள் மாலை மாற்று வைபவம் நடந்தது. இதையொட்டி ஆண்டாள் சன்னதியில் பெருமாள் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், ஆண்டாளுக்கும் மாலை மாற்று வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.