செய்திகள்
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி கலெக்டருக்கு கொரோனா

Published On 2021-10-26 03:04 GMT   |   Update On 2021-10-26 03:04 GMT
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா. ஊட்டி அருகே கேத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் கலெக்டரின் மகன் உள்பட சிலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தி கலெக்டர் மகன் சிகிச்சை பெற்று வருகிறார். மகன் பாதிக்கப்பட்டதால், கலெக்டருக்கும் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதனால் சுகாதார குழுவினர் பங்களாவுக்கு சென்று கலெக்டரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டார். எனினும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் பாதிப்பு அதிகமாக இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் பங்களாவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News