செய்திகள்
கைது

சென்னிமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2021-10-12 11:17 GMT   |   Update On 2021-10-12 11:17 GMT
சென்னிமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னிமலை பகுதியில் ஒரு காலி இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவதுக்கு இடத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அச்த பகுதியில் சிலர் அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர். அவர்களை பேலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னிமலையை சேர்ந்த சரவணன் (45), மணி (67), ஜோதி சுப்பிரமணியம் (46), தாஸ் (40), ராசு (51), கனகராஜ் (43) என தெரிய வந்தது. அவர்கள் 6 பேரை பேலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3 ஆயிரத்து 620 பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News