ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடக்கம்

Published On 2021-11-03 04:36 GMT   |   Update On 2021-11-03 07:47 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நாளை முதல் வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் கோவில் வளாகம், உட்பிரகாரத்தில் வைத்து கந்தசஷ்டி திருவிழா நடைபெற உள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்தசஷ்டி திருவிழாநாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.35மணிக்கு சுவாமி யாகசாலை பூஜைக்கு புறப்படுதல் நடைபெறுகிறது.

தொடர்ந்து யாகசாலை பூஜை ஆரம்பம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

2-ம் திருவிழாவான 5-ந்தேதி முதல் 5-ம் திருவிழாவான 8-ந்தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

6-ம் நாள் திருவிழாவான 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மதியம் 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.

7-ம் திருவிழாவான 10-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு மாலை மாற்றும் வைபவம், இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

8-ம் நாள் திருவிழாவான 11-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு பட்டிணபிரவேசம் நடக்கிறது.

9 மற்றும் 10-ம் திருவிழாக்களில் இரு நாட்களும் காலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு ஊஞ்சல் வைபவமும் நடக்கிறது.

11-ம் நாள் திருவிழாவான 14-ந்தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்றும் இரவு ஊஞ்சல் வைபவமும் நடக்கிறது.

12-ம் நாள் திருவிழாவான வருகிற 15-ந்தேதி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு மஞ்சள் நீராட்டும் வைபவம் தொடர்ந்து உற்சவம் நிறைவு பெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நாளை முதல் வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் கோவில் வளாகம், உட்பிரகாரத்தில் வைத்து கந்தசஷ்டி திருவிழா நடைபெற உள்ளது.

1-ம் திருவிழா முதல் 5-ம் நாள் முடிய நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் சரிதனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களில் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமும், 5 ஆயிரம் பேர் நேரில் வருபவர்களுக்கும் என காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். சிகர நிகழ்ச்சியான
சூரசம்ஹாரம்
மற்றும் திருக்கல்யாணம் ஆகிய இரண்டு நாள்கள் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News