வழிபாடு
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-02-10 07:08 GMT   |   Update On 2022-02-10 07:08 GMT
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் சிங்காரவேலருக்கு கார்த்திகை பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது.
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் சிங்காரவேலருக்கு கார்த்திகை பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிங்காரவேலரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News