ஆன்மிகம்
நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவிலில் திருமாலை பூஜை
நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவிலில் திருமாலை பூஜை நடந்தது. திருமாலை பூஜையை யொட்டி உலகம்மன் சாந்த சொரூப ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவிலில் திருமாலை பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. 9 மணிக்கு தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டது.
இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர். அந்த பகுதியில் உள்ள வீதிகளைச் சுற்றி ஊர்வலம் கோவிலுக்கு வந்தடைந்தது. திருமாலை பூஜையை யொட்டி உலகம்மன் சாந்த சொரூப ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் திருமாலை பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
2 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு அனைத்து தெருக்களிலும் வீட்டு வாசலில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உலகம்மன் பக்த சேவா குழுவினர் செய்திருந்தனர்.
இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர். அந்த பகுதியில் உள்ள வீதிகளைச் சுற்றி ஊர்வலம் கோவிலுக்கு வந்தடைந்தது. திருமாலை பூஜையை யொட்டி உலகம்மன் சாந்த சொரூப ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் திருமாலை பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
2 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு அனைத்து தெருக்களிலும் வீட்டு வாசலில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உலகம்மன் பக்த சேவா குழுவினர் செய்திருந்தனர்.