செய்திகள்
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள காட்சி.

மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை

Published On 2021-06-08 06:09 GMT   |   Update On 2021-06-08 06:09 GMT
திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியான கடத்தூர் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட கடத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. இங்கு பணியாற்றும் பல தொழிலாளர்கள் மற்றும் டிரைவர்கள் மாநில எல்லைகளை கடந்து திரும்புகின்றனர். அருகிலுள்ள மாநிலங்களுக்கு சென்று வரும் இவர்களால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், இதற்கு தீர்வாக மாவட்ட எல்லையோரப்பகுதியில் தீவிர கண்காணிப்பு தேவை எனவும் பொதுமக்கள் அறிவுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையான கடத்தூரிலுள்ள சோதனைசாவடியில் போலீசார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப்பகுதியை கடந்து செல்பவர்களுக்கு இ-பதிவு அவர்கள் சென்று திரும்பும் காரணங்களுக்கான ஆதாரங்கள் உள்ளதா? எனவும் சோதனை செய்கின்றனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு நோய்த்தொற்று பாதிப்பு குறித்த தெளிவான தகவல்களை பெற்றுக்கொண்டு எல்லையை கடந்து செல்ல அனுமதிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இரண்டு மாவட்ட எல்லையில் உள்ள இந்த சோதனைசாவடியில் தொடர்ந்து கண்காணிப்பும், வாகனச்சோதனை செய்வதும் அவசியம் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News