செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மும்பையில் புதிதாக 2,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-09-27 17:23 GMT   |   Update On 2020-09-27 17:23 GMT
மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது. அதிலும் மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் இன்று மும்பையில் மேலும் 2,261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை மும்பையில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 846  பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து இன்று 834 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  1 லட்சத்து 25 ஆயிரத்து 019 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 24 ஆயிரத்து 144 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 44 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 794 ஆக உயர்ந்து உள்ளது.
Tags:    

Similar News