செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-01-11 14:10 GMT   |   Update On 2021-01-11 14:10 GMT
ஈரோட்டில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

ஈரோடு கே.கே.நகர் தெற்கு முதல்வீதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருடைய மனைவி புனிதவதி (வயது 57) . இவர்களுக்கு சசிதா என்ற மகளும், அபிலாஷ் என்ற மகனும் உள்ளனர். சசிதா திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். அபிலாஷ் புனேவில் வேலை செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக புனிதவதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 7-ந் தேதி ஞானசேகரன் பழனியில் உள்ள சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலை அவருடைய வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. அதன்பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, புனிதவதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஞானசேகரன் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த புனிதவதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து புனிதவதியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News