செய்திகள்
ரெயிலில் அடிபட்டு பலியான புள்ளிமான்கள்

தண்ணீர் தேடி வந்தபோது ரெயிலில் அடிபட்டு 3 புள்ளிமான்கள் பலி

Published On 2021-06-10 03:17 GMT   |   Update On 2021-06-10 03:17 GMT
ரெயிலில் அடிபட்டு இறந்த 3 மான்களின் உடல்களை வனத்துறையினர் உடற்கூறு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்-திருப்பதி ரெயில் மார்க்கத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலையில் 3 புள்ளி மான்கள் தண்ணீர் தேடி வந்த போது ரெயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகே இறந்து கிடந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த 3 புள்ளிமான்களின் உடலையும் மீட்டனர்.

அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் இறந்த 3 மான்களின் உடல்களை உடற்கூறுபரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
Tags:    

Similar News