உள்ளூர் செய்திகள்
தற்கொலை செய்த தொழில்அதிபர்

நெல்லை தொழில் அதிபரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்-யார்? - 20 வீடியோக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

Published On 2022-01-26 09:24 GMT   |   Update On 2022-01-26 09:28 GMT
நெல்லை லாட்ஜில் தற்கொலை செய்த தொழில் அதிபரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்-யார்? என போலீசார் அவர் குடும்பத்தினருக்கு அனுப்பிய 20-க்கும் மேற்பட்ட வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது42). மதுரையில் கேட்டரிங் தொழில் செய்து வந்த இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த சில மாதங்களாக மதுரை மற்றும் நெல்லையில் உள்ள ஓட்டல்களில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 21-ந்தேதி நெல்லை புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது வீடியோ ஒன்றை தனது செல்போனில் பதிவு செய்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி விட்டு விஷம் குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

தனது கணவரிடம் பணம் வாங்கியவர்கள் அவரை ஏமாற்றியதால் அவர் தற்கொலை செய்து கொண்ட தாக அவரது மனைவி மேலப் பாளையம் போலீசில் புகார் செய்தார்.  

எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இதற்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவரது உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.

இந்நிலையில் தொழில் அதிபர் முருகன் 20-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்து குடும்பத்தினருக்கு அனுப்பியதாக தெரிகிறது.  அதில் அவர் தற்கொலைக்கு காரணமான வர்கள் குறித்து கூறி உள்ளதாக தெரிகிறது.

அதனை போலீசார் கைப்பற்றி தற்கொலைக்கு காரணமானவர்கள் யார்- யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News