ஆன்மிகம்
சதுரகிரி கோவிலில் பக்தர்கள் வழிபாடு

சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-02-25 08:51 GMT   |   Update On 2021-02-25 08:51 GMT
சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பிரதோஷத்தையொட்டி அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர்.

காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது.

கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு, முககவசம் அணிந்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. .

இரவு நேரங்களில் பக்தர்கள் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், இளநீர் சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News