உள்ளூர் செய்திகள்
கோப்பு காட்சி.

சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு-சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி இன்று மாலை பார்க்கலாம்

Published On 2022-04-16 10:06 GMT   |   Update On 2022-04-16 10:06 GMT
சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு-சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி இன்று மாலை பார்க்கலாம்
கன்னியாகுமரி, ஏப்.16-

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாள்அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு கன்னியா குமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் இவ்விரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழுகின்றன.

இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலைப் பகுதியிலும் மட்டும் தான் காண முடியும். 

இந்த அபூர்வ காட்சியைகாண ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது. இதனால் கன்னியாகுமரியில் நிகழும் இந்த அபூர்வ காட்சியை காண சித்ரா பவுர்ணமியான இன்று நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள். 

இன்று மாலை 6 மணிக்கு மேற்கு பக்கம்உள்ள அரபிக்கடல் பகுதியில் வர்ணஜாலத்துடன் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள் மறையும். அப்போது கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடல் பகுதியில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்து போன்ற வடிவத்தில்எழும்.

அப்போது கிழக்கு கடல் பகுதியில் உள்ள வானம் சந்திரனி  ன் ஒளி வெளிச் சத்தால் ”பளிச்“என்று மின்னும். 

இந்தஅரிய காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி மற்றும் கன்னியாகுமரி பழத் தோட்டம் பகுதியில் உள்ள முருகன் குன்றத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்துரசிப்பார்கள். 

சித்ரா பவுர்ணமி யையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில்இன்று காலை சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் போன்றவை நடந்தது.

மேலும் சித்ரா பவுர்ணமியை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்குமறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காணிக் கையாக வழங்கியரூ.1கோடி மதிப்புள்ள வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு அலங்கார தீபா ராதனையும் நடைபெற்றது. சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியா குமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது.
Tags:    

Similar News