லைஃப்ஸ்டைல்
மருத மர பட்டை டீ

மாரடைப்பு, மூச்சுத்திணறல் பிரச்சினையை குணமாக்கும் மருத மர பட்டை டீ

Published On 2021-02-20 05:28 GMT   |   Update On 2021-02-20 05:28 GMT
மருத மர பட்டைமாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள் :

மருதம் பட்டை பவுடர் - 4 கிராம்
டீ தூள் - சிறிதளவு
தண்ணீர் - 350 மி.லி.
வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
பசும் பால் - 40 மி.லி.

செய்முறை:

பாத்திரத்தில் மருதம் பட்டை பவுடர், டீ தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

100 மி.லி. அளவுக்கு வற்றியதும் அதனுடன் வெல்லம், பால் சேர்த்து வடிகட்டி பருகவும்.

மருதம் பட்டை பவுடர் மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்.

ஆரோக்கிய பலன்: மருதம் பட்டை மருத்துவ குணம் கொண்டது. நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தது. மாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது. இந்த மருதம் பட்டை டீயை இரண்டரை மாதம் பருகலாம். பின்னர் சில காலம் இடைவெளி விட்டு தொடர்ச்சியாக பருகலாம். ஆண்டு முழுவதும் பருகக்கூடாது.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News