செய்திகள்
காவல்துறையில் முதல் முறையாக 13 திருநங்கைகள்

சத்தீஸ்கரில் காவல்துறையில் முதல் முறையாக 13 திருநங்கைகள் சேர்ப்பு

Published On 2021-03-04 19:04 GMT   |   Update On 2021-03-04 19:04 GMT
தகுதி அடிப்படையில் வழக்கமான தேர்வுமுறைகளில் தேர்ச்சி பெற்று திருநங்கைகள் காவலர்களாக தேர்வாகி இருக்கிறார்கள்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல்துறையில் முதல் முறையாக 13 திருநங்கைகள், ஏட்டுகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். தகுதி அடிப்படையில் வழக்கமான தேர்வுமுறைகளில் தேர்ச்சி பெற்று அவர்கள் காவலர்களாக தேர்வாகி இருக்கிறார்கள். இன்னும் 2 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

தேர்வான 13 பேரில், 8 பேர் ராய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “நான் காவலர் ஆவேன் என்று கனவிலும் நினைத்தது கிடையாது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும் நாங்கள் இதை சாதித்துள்ளோம்” என்று பூரிப்புடன் 24 வயதான சிவன்யா தெரிவித்தார்.
Tags:    

Similar News