செய்திகள்
தற்கொலை

பொறையாறு அருகே அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை

Published On 2021-01-12 11:00 GMT   |   Update On 2021-01-12 11:00 GMT
பொறையாறு அருகே விஷம் குடித்து அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி மேடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது40). இவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி வெண்மதி. இவர்களுக்கு 2 குழந்தைகள். இந்த நிலையில் லட்சுமணன் நேற்று மாலை பொறையாறு ராஜீவ் புரம் வள்ளுவன் சுடுகாடு அருகே பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அருகே பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) பாட்டில் கிடந்தது. இதை அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மனவேதனை அடைந்த லட்சுமணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News