செய்திகள்
கோப்புப் படம்

இலங்கையில் அக்டோபர் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-09-17 17:45 GMT   |   Update On 2021-09-17 17:45 GMT
இலங்கையில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொழும்பு:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இலங்கையில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,938 ஆக அதிகரித்துள்ளது. 4.29 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் குறையாத நிலையில், இலங்கையில் ஊரடங்கு அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் கொரோனா பரவல் தடுப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தியுள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அக்டோபர் 1-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News