செய்திகள்
கோப்புப் படம்

இந்தியாவுக்கு பைசர் தடுப்பூசி வழங்க மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு

Published On 2020-12-03 20:30 GMT   |   Update On 2020-12-03 20:30 GMT
இந்தியாவுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக, மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசை தடுப்பதற்கு அமெரிக்காவின் பைசர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

95 சதவீதம் செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிற இந்த தடுப்பூசியை, உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்தில் பயன்படுத்துவதற்கு அங்குள்ள அரசு ஒப்பதலை வழங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை கிடைக்கச் செய்வதற்கான வாய்ப்பு வசதிகள் குறித்து மத்திய அரசுடன் பைசர் நிறுவனம் பேச்சு நடத்த இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், “இப்போது நாங்கள் உலகமெங்கும் உள்ள பல அரசுகளுடன் பேசி வருகிறோம். இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை கிடைக்கச் செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்கு இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

“இந்த பெருந்தொற்று காலத்தில் பைசர் தனது தடுப்பூசியை அரசு ஒப்பந்தங்கள் மற்றும் ஒழுங்குமுறை அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் அடிப்படையில் மட்டுமே வழங்கும்” என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News