ஆன்மிகம்
வைகுண்ட ஏகாதசி(பழைய படம்)

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு

Published On 2020-12-22 09:19 GMT   |   Update On 2020-12-22 09:19 GMT
வைகுண்ட ஏகாதசியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. வைகுண்ட ஏகாதசி விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற (25-ந்தேதி) வெள்ளிக்கிழமை நடக்கிறது.

இதையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தரிசனங்களில் ஒன்றாக திகழும் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா 25-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்று அதிகாலை கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் உற்சவமூர்த்தி பவனி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News