செய்திகள்
விபத்து பலி

போளூர் அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி

Published On 2021-02-27 12:43 GMT   |   Update On 2021-02-27 12:43 GMT
போளூர் அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருடன் பணிபுரியும் சிவா என்பவரும் மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். போளூர் பைபாஸ் சாலையில் குண்ணத்தூர் கிராமம் வந்தபோது எதிரில் அதிவேகமாக வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சிவா தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விமல்ராஜ் காயங்களுடன் தப்பினார். இது குறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News