செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-09-10 11:58 GMT   |   Update On 2019-09-10 11:58 GMT
ஈரோட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 38) தனபால் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு புவனேஸ்வரி (18) என்ற ஒரு மகள், பிரகாஷ் (15) ஒரு மகனும் உள்ளனர். ஜெயலட்சுமிக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஜெயலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News