லைஃப்ஸ்டைல்
மசாலா மோர்

கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம்

Published On 2021-05-12 05:38 GMT   |   Update On 2021-05-12 05:38 GMT
கோடை வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும் உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இந்த வகையில் இந்த பானம் உடலுக்கு குளுமை தரும். செய்வதும் மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

பச்சை மிளகாய் - 1/2
கறிவேப்பிலை - 3 இலை
இஞ்சி - 1/4 இன்ச்

செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தயிரை ஒரு பௌலில் போட்டு, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

கடைந்து வைத்துள்ள மோரில் அரைத்த விழுது, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News