செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதல்-அமைச்சர் 22-ந் தேதி திருப்பூர் வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்

Published On 2020-10-17 14:18 GMT   |   Update On 2020-10-17 14:18 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி திருப்பூர் வர உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
திருப்பூர்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி திருப்பூர் வர உள்ளார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். 

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்களுக்கான திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் நிறைவு பெற்றுள்ள வளர்ச்சி திட்டப்பணிகளையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்-அமைச்சர் திருப்பூர் வருகையையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News