செய்திகள்
கைது

நாமக்கல்லில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

Published On 2021-11-24 18:04 GMT   |   Update On 2021-11-24 18:04 GMT
நாமக்கல்லில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று மேட்டுத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் நாமக்கல் நடராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்த பிரபு (வயது 35) என்பதும், கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News