அழகுக் குறிப்புகள்
அழகு சாதனப்பொருட்கள் வாங்கும் போது இந்த தவறை செய்யாதீங்க...

அழகு சாதனப்பொருட்கள் வாங்கும் போது இந்த தவறை செய்யாதீங்க...

Published On 2022-04-08 04:24 GMT   |   Update On 2022-04-08 07:43 GMT
ஒவ்வொரு ஒப்பனை பொருளிலும் பல வகையான வாசனைப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று தங்களை அழகுபடுத்தி கொள்வது. இதற்காக உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சந்தையில் பலவிதமான ஒப்பனை பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றில் எதை வாங்குவது என்பதில் குழப்பம் ஏற்படலாம். எதை வாங்குவதாக இருந்தாலும் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. அதை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒப்பிடுதல்

சந்தையில் கிடைக்கும் மற்ற ஒப்பனை பொருட்களுடன் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருள் எந்த வகையில் சிறந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எதை வாங்குவதற்கு சிறந்த இடம் எது? அதற்கான தகுந்த விலை என்ன? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் குறைந்த விலையில் கூட தரமான பொருட்களை வாங்க முயும்.

எளிமையாகவும், நீடித்தும் இருத்தல்

ஒப்பனை பொருட்கள் எளிமையாக கையாளும் வகையில் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் சில மணி நேரத்திற்குள்ளாகவே ஒப்பனை கலைந்து விடக்கூடாது. நீண்ட நேரம் நீடித்து இருக்கும் வகையிலான ஒப்பனை பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக ஐ-லைனர் வாங்கும் போது நீர்த்த வடிவத்தில் இருப்பதை வாங்குவதை தவிர்த்து பென்சில் ஐ-லைனர் வாங்குவது சிறந்தது.

சருமத்திற்கு உகந்ததை தேர்ந்தெடுத்தல்

ஒவ்வொரு ஒப்பனை பொருளிலும் பல வகையான வாசனைப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே சருமத்துக்கும் சரியாக பொருந்தும் வகையிலான ஒப்பனை பொருட்களை தேர்வு செய்ய வேண்டும், வெயிலில் செல்லும் போது புற ஊதாக்கதிர்களால் சருமம் பாதிக்காமல் இருப்பதற்கு எஸ்.பி.எப் தன்மை கொண்டதை கவனித்து வாங்க வேண்டும்.

பொருத்தமானதை தேர்வு செய்தல்

ஒவ்வொருவருக்கும் முகம், கண், உதடு, சருமம் தனித்தன்மை கொண்டதாக இருக்கும். எனவே அதற்கு ஏற்ற வகையான ஒப்பனை பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். பேக்கேஜ் முறையில் பவுண்டேஷன் முதல் லிப்ஸ்டிக் வரை அனைத்தையும் ஒன்றாக வாங்கலாம்.

பரிசோதித்தல்

எந்தவிதமான ஒப்பனை பொருளையும் வாங்கியவுடன் நேரடியாக பயன்படுத்தாமல் முதலில் அதை சிறிது எடுத்து கையில் தடவிப்பார்க்க வேண்டும். அதனால் சருமத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

இயற்கைக்கு முதலிடம்

இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் அவற்றிலும் ரசாயனப்பொருட்கள் கலந்திருக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து ஒப்பனை பொருட்களை தேர்வு செய்து வாங்குவது சிறந்தது.
Tags:    

Similar News