ஆன்மிகம்
திருநாகேஸ்வரம்

சர்ப்ப தோஷத்திற்கு தீர்வு தரும் தலங்கள்

Published On 2020-02-21 07:42 GMT   |   Update On 2020-02-21 07:42 GMT
சிவராத்திரி நன்னாளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால், சர்ப்ப தோஷங்கள், ராகு- கேதுவால் ஏற்படும் திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பாதிப்புகள் நீங்கும்.
ஆதிசேஷன் பூலோகத்தை தன் தலையில் சுமந்து, தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தார். ஒருமுறை அவர் மகா சிவராத்திரி அன்று முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையை அவருக்கு வழங்கினார்.

எனவே சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால், சர்ப்ப தோஷங்கள், ராகு- கேதுவால் ஏற்படும் திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பாதிப்புகள் நீங்கும்.
Tags:    

Similar News