செய்திகள்
கோப்புபடம்

காங்கயத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம்

Published On 2021-11-27 06:33 GMT   |   Update On 2021-11-27 06:33 GMT
தொடக்க விழா காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில் நடைபெற்றது.
காங்கயம்:

இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைப்பயணம் காங்கயத்தில் தொடங்கியது. இல்லம் தேடி கல்வி என்னும் தலைப்பில் இந்த கலைக்குழுவினர் காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 61 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

இதற்கான தொடக்க விழா காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சிவகுமார், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மகேந்திரன், சுசீலா, சமக்ரா சிக்ஷா மேற்பார்வையாளர் சிவகுமார், இல்லம் தேடிக் கல்விக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News