செய்திகள்
அரிவாள் வெட்டு

தஞ்சை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு

Published On 2021-10-13 11:16 GMT   |   Update On 2021-10-13 11:16 GMT
தஞ்சை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம்புதூர் தெற்கு தெருவில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் வீட்டின் வெளியே இருந்த எலுமிச்சை மரத்தை பணியாளர்கள் வெட்டியதாக தெரிகிறது.

இதனை அதே கிராமத்தில் வசிக்கும் விவசாயியான முத்துசாமி என்பவர் கூறி தான் மரத்தை வெட்டியதாக எண்ணிய ராஜேந்திரன் முத்துசாமியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ராஜேந்திரன் ஆத்திரமடைந்து அரிவாளால் முத்துசாமியை வெட்டினார். இதில் படுகாய மடைந்த முத்துசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News