செய்திகள்
புகளூர் ரெயில்வே காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
நொய்யல்:
புகளூர் ரெயில்வே காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர் வீரமணி, காகிதஆலை துப்புரவு அலுவலர் ரவீந்திரன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் புகளூர் ரெயில்வே காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.