ஆன்மிகம்
கூடலழகர் பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கிருஷ்ணர்
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வியூக சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்திலும், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர்.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த வருடம் மிகவும் எளிமையான முறையில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வியூக சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்திலும், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். மேலும் மதுரை திருப்பாலை கிராமத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நேற்று கருட வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வியூக சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்திலும், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். மேலும் மதுரை திருப்பாலை கிராமத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நேற்று கருட வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.