செய்திகள்
செல்போன் டவர் பேட்டரி அறையில் தீ விபத்து

சோளிங்கரில் செல்போன் டவர் பேட்டரி அறையில் தீ விபத்து

Published On 2021-04-15 15:02 GMT   |   Update On 2021-04-15 15:02 GMT
சோளிங்க பஸ் நிலையம் அருகே தனியார் செல்போன் டவர் பேட்டரி அறையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
சோளிங்கர்:

சோளிங்க பஸ் நிலையம் அருகே தனியார் செல்போன் டவர் உள்ளது. கடந்த 4 வருடங்களாக இந்த டவர் செயல்படாமல் உள்ளது. இந்த நிலையில் செல்போன் டவரை அகற்றும் பணி நடந்துள்ளது. அப்போது அருகில் உள்ள பேட்டரி அறையில் திடீரென தீப்பற்றி உள்ளது.

இதை கண்ட‌ பணியாளர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News