ஆன்மிகம்
திருப்பாவை

மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 23

Published On 2021-01-07 01:32 GMT   |   Update On 2021-01-07 01:32 GMT
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் 
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து 
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி 
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு 
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் 
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய 
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த 
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். 

பொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
Tags:    

Similar News