செய்திகள்
முசிறி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவர் கைது
முசிறி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி:
முசிறி அருகே சோளம்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக தொட்டியபட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 42) என்பவரை முசிறி போலீசார் கைது செய்தனர். மேலும் 4 சேவல்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.