செய்திகள்
விபத்து பலி

கம்பைநல்லூர் அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2021-10-23 10:09 GMT   |   Update On 2021-10-23 10:09 GMT
கம்பைநல்லூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள நவலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் மொரப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது நவலை ஏரிக்கரை அருகில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தமிழ் உயிரிழந்தார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News