செய்திகள்
குரூப் சுற்று போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறினார் சாய் பிரனீத்
பேட்மிண்டன் குரூப் சுற்றில் நெதர்லாந்து, இஸ்ரேல் வீரர்களுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்த சாய் பிரனீத் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.
பேட்மிண்டன் குரூப் சுற்று போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் ‘டி’ பிரிவில் இடம் பிடித்திருந்தார். இதே அணியில் இஸ்ரேலை சேர்ந்த மிஷா ஜில்பெர்மன், நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவ் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
சாய் பிரீனத் கடந்த 24-ந்தேதி, அவரது முதல் ஆட்டத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த மிஷா ஜில்பெர்மன்-ஐ எதிர்கொண்டார். இதில் 17-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இன்று நெதர்லாந்தை சேர்ந்த மார்க் கால்ஜோவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியிலும் 14-21, 14-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேறினார்.