செய்திகள்
நன்னிலம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
நன்னிலம் அருகே கீழே விழுந்ததில் கை முறிந்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நன்னிலம்:
நன்னிலம் அருகே திருப்பள்ளி முக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சீத்தாராமன்(வயது26). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து கை முறிந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் இவர் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார். சம்பவத்தன்று மனமுடைந்த சீத்தாராமன் வீட்டின் எதிர்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நன்னிலம் போலீசில் சீத்தராமன் தந்தை ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.