செய்திகள்
கைது

வள்ளியூர் அரசு பள்ளியில் மடிக்கணினி திருடிய என்ஜினீயர் கைது

Published On 2020-11-28 10:49 GMT   |   Update On 2020-11-28 10:49 GMT
வள்ளியூர் அரசு பள்ளியில் 2 மடிக்கணினிகளை திருடி சென்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர்:

வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கியபோது போக மீதி இருந்த மடிக்கணினிகள் கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது ஆய்வகத்திற்கு பராமரிப்பு பணிக்காக வந்த தனியார் நிறுவன என்ஜினீயரான அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் அங்கு வைத்திருந்த 2 மடிக்கணினிகளை திருடிச் சென்றுள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்த பள்ளி தலைமையாசிரியர் ரைமண்ட் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அதன் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
Tags:    

Similar News