உள்ளூர் செய்திகள்
800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

செஞ்சி அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Published On 2022-01-07 12:23 GMT   |   Update On 2022-01-07 12:23 GMT
செஞ்சி அருகே சாராயம் காய்ச்சுவதற்காக 4 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊறல்களையும் சாராயம் காய்ச்சவைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களையும் போலீசார் கைப்பற்றினர்.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கௌரிசங்கர் தனிப்பிரிவு ஏட்டு பாரதி மற்றும் போலீசார் போத்துவாய் அருகே உள்ள கஞ்சூர் மலைப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக 4 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊறல்களையும் சாராயம் காய்ச்சவைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களையும் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள், கைப்பற்றப்பட்ட சாராய ஊரல்கள் கொட்டி அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News