லைஃப்ஸ்டைல்
ஜவ்வரிசி கூழ்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜவ்வரிசி கூழ்

Published On 2019-07-29 05:23 GMT   |   Update On 2019-07-29 05:23 GMT
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியம் காக்கும் கூழ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து பருகலாம். அந்த வகையில் இன்று ஜவ்வரிசி கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - அரை கப்
பச்சை மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - 1 கப்



செய்முறை:

ஜவ்வரிசியை கழுவி இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.

ப.மிளகாய், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அது கொதிக்க தொடங்கியதும் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

பச்சை வாசம் நீங்கியதும் ஜவ்வரிசியை கொட்டி சிறு தீயில் கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து ருசிக்கலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News