செய்திகள்
கோப்புபடம்

இலவச அழகுக்கலை பயிற்சி

Published On 2021-10-18 08:05 GMT   |   Update On 2021-10-18 08:05 GMT
பயிற்சி நாட்களில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள், சீருடை இலவசமாக வழங்கப்படும்.
திருப்பூர்:

திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி துவங்க உள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.

திருப்பூர் மாவட்ட கிராமப்புற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், இப்பயிற்சியில் இணையலாம். பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.பயிற்சி நாட்களில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள், சீருடை இலவசமாக வழங்கப்படும்.

மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு சான்றளிப்பு பெற்ற பாடத்திட்டங்கள். பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவோருக்கு, மத்திய அரசின் ஸ்கில் இந்தியா சான்று வழங்கப்படும். 

தொழில் துவங்க கடன் ஆலோசனை, தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 0421 2256626, 99525 18441, 86105 33436 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய நிர்வாகி அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News