உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறை கலெக்டரிடம் ஆதி சைவ சங்கத்தினர் புகார் மனு

தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

Published On 2022-05-07 10:11 GMT   |   Update On 2022-05-07 10:11 GMT
தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என மயிலாடுதுறை கலெக்டரிடம் சிவாச்சாரியார் சங்கம் மனு அளித்தனர்.
தரங்கம்பாடி:

தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் போக்கு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆன்மீக மரபை அவமதித்தல், தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாரகள் சேவா சங்க மாவட்ட தலைவர் கணேச சிவாச்சாரியார், மாவட்ட செயலாளர் மகேஷ் குருக்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அளித்த மனுவில் கூறியதாவது. ஆன்மீகம் என்பது தமிழகத்தின் பெருமை. பல காலங்களாக இந்து மதத்தையும், அதன் அங்கமாக இருக்கக்கூடிய அனைத்து சமயங்களையும், எங்களது தெய்வங்களையும், தமிழ் தேசத்தின் இறை நம்பிக்கையையும் நாத்திக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

தருமபுரம் ஆதீனத்தின் ஆன்மீக விழாவிற்கு வந்த தமிழக ஆளுநரின் உயிருக்கே பங்கம் விளைவிக்கும் வகையில் கொடி கம்பம் எடுத்து கான்வாய் வழியில் வீசப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கடைப்பிடித்து வரும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி குருவுக்கும், சிஷ்யர்களுக்கும் இருக்கும் உன்னதான விஷயம். இதனைத் தடுக்கும் விதமாக செயல்படுவதோடு, ஆதீனகர்த்தரின் ஏதோ கெட்ட செயலுக்கு விளைவிக்கும் விதமாகவும் மறுபடியும் கோஷம் போடும் வேலையில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து புலன் விசாரணை செய்து இந்து மத மரபை அவமதித்து, தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். சைவ குருமார்களின் நன் மதிப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News