செய்திகள்
கோப்புபடம்

மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-14 09:31 GMT   |   Update On 2020-09-14 09:31 GMT
புதுச்சேரியில் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்யக்கூடாது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தக்கூடாது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் பாராளுமன்றம் கூடும் இன்றைய தினம் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுவையில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சோ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலை நாதன், அபிஷேகம், தினேஷ் பொன்னையா, சேது செல்வம், கீதநாதன், சுப்பையா, மாதர் சங்கம் சரளா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பெருமாள், சீனுவாசன், பிரபுராஜ், கம்யூனிஸ்டு (எம்.எல்.) மோதிலால், சங்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News