செய்திகள்
ஈரானில் 31 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
ஈரான் நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது.
டெஹ்ரான்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 13-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்தைக் கடந்துள்ளது.