செய்திகள்
மாயம்

நெட்டப்பாக்கத்தில் 3 குழந்தைகளுடன் தாய் மாயம்

Published On 2019-11-03 12:29 GMT   |   Update On 2019-11-03 12:29 GMT
நெட்டப்பாக்கத்தில் 3 மகன்களுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேதராப்பட்டு:

புதுவை கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பலராமன் (வயது39) கொத்தனார். இவர் சென்னையில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா(28) இவர்களுக்கு லோகேஷ்(7) மற்றும் அகிலேஷ்(3½), அபினேஷ்(3½) என்கிற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

சுகன்யா 3 குழந்தைகளும் பலராமனுடன் சென்னையில் ஒன்றாக தங்கி இருந்தனர். இந்நிலையில் சுகன்யாவிற்கு அங்கு இருக்க பிடிக்காததால் நெட்டப்பாக்கம் ஏரிப்பாக்கத்தில் உள்ள சுகன்யாவின் பெரியம்மா வானமதி என்பவரது வீட்டிற்கு தனது 3 மகன்களுடன் சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த 29-ந் தேதி சென்னையில் இருக்கும் தனது கணவர் பலராமனை பார்ப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அங்கே சுகன்யா செல்லவில்லை. இது குறித்து பலராமன் பல இடங்களில் தேடியும் சுகன்யா மற்றும் 3 குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் இது குறித்து பலராமன் நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News