செய்திகள்
மரணம்

ஆரணி அருகே குடிசை வீடு இடிந்து மூதாட்டி பலி

Published On 2021-11-26 05:56 GMT   |   Update On 2021-11-26 05:56 GMT
ஆரணி அருகே குடிசை வீடு இடிந்து விழுந்ததில் 70 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரணி:

ஆரணி அடுத்த இரும்பேடு அருகே பழங்காமூர் காவங்கரை பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 70). கணவரை இழந்து குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குடிசை வீடு சேதமடைந்துள்ளது. நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து பச்சையம்மாள் மீது விழுந்தது.

இதில் வீடு முற்றிலுமாக தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உடலை மீட்டனர்.

சம்பவம் இடத்திற்கு வந்த ஆரணி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News